fbpx

மக்களே கவனம்.. 4 மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழை எச்சரிக்கை.. 5 நாட்களுக்கு கனமழை தொடரும்..

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பூர்‌, திண்டுக்கல், ஈரோடு, சேலம்‌, கரூர், நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும்‌ நெல்லை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோவை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, திருச்சி, பெரம்பலூர்‌, விருதுநகர்‌, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 2-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.
நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌ மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 3, 4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை
பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி,திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை மற்றும்‌ திருவண்ணாமலை
மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார் வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரப்பிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.. எனவே இன்று முதல் வரும் 3-ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. EPFO-ன் இந்த சேவைகள் ஆன்லைனிலேயே கிடைக்கும்..

Wed Aug 31 , 2022
ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. இபிஎஃப்ஓ அமைப்பில் சுமார் 7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.. ஒவ்வொரு மாதம் சம்பளத்தில் பிஎஃப் பணம் பிடித்தம் செய்யப்படும் போது, ஊழியர் சார்பில் குறிப்பிட்ட […]

You May Like