fbpx

#திருச்சி :பள்ளி கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண்குழந்தையின் சடலம்.. திடுக்கிடும் தகவல்..! 

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள காட்டூரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றின் கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து குழந்தை எப்படி அங்கு வந்திருக்கும் என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த  ஆதிதிராவிடர் நலத்துறையின் தனி தாசில்தாரான சந்திர தேவநாதன் என்பவரும் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளியில் விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

வலிப்பு வந்த மருமகளை கொடூரமாக தாக்கி கொலை செய்த மாமியார்..!! மாமனாரின் துக்க நிகழ்ச்சியில் நேர்ந்த சோகம்..!!

Fri Dec 9 , 2022
மருமகளை அவரது மாமியாரே கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்வராயன் மகன் ராமகிருஷ்ணன் (38). இவரது மனைவி செல்வி (30). இவர்களுக்கு லோகிதாஸ் என்ற 10 வயது மகனும், கோகுல் என்ற 7 வயது மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் ராமகிருஷ்ணன் மனைவி […]
வலிப்பு வந்த மருமகளை கொடூரமாக தாக்கி கொலை செய்த மாமியார்..!! மாமனாரின் துக்க நிகழ்ச்சியில் நேர்ந்த சோகம்..!!

You May Like