பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
வங்கித் துறையில் தொழிற்சங்கங்களின் குடை அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் அமைப்பு வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிக்கையை வெளியிட்டது.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது, மும்பையில் நேற்று அமைப்பின் கூட்டம் நடைபெற்றது, இந்திய வங்கிகள் சங்கத்தின் கோரிக்கைகளை கடிதங்களாக அனுப்பியும் எந்த பதிலும் வராததால், ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.