fbpx

புற்றுநோய் செல்களை அழிக்கும் வாழை இலை ஜூஸ்.! வேறு என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?

பொதுவாக வாழை மரத்தில் இலை, காய், பழம், தண்டு என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாகவும், உணவிற்கும் பயன்பட்டு வருகிறது. அதுபோல தமிழ்நாட்டில் பல குடும்பங்களில் வாழை இலையில் விருந்து வைப்பது குறித்து கேள்விப்பட்டிருப்போம். இது உடலுக்கும் பல நன்மையை தரும். இதன்படி வாழை இலையை ஜுஸாக செய்து குடித்து வருவதன் மூலம் பல நோய்கள் குணமாவதாக மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அதிகமாக ஆண்டிஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ள வாழை இலையை ஜுஸ் செய்து குடித்து வந்தால் தலை முதல் கால் வரை பல்வேறு நன்மைகள் ஏற்படும். குறிப்பாக தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் வாழை இலையை ஜூஸ் செய்து குடித்து வர தோல் பொலிவாக மாறும். சரும வறட்சி, அலர்ஜி, தோல் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

மேலும் வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாழை இலை ஜூஸ் அருமருந்தாக இருந்து வருகிறது. செரிமான கோளாறு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மலச்சிக்கல், கல்லீரல் பிரச்சனை போன்றவற்றை வரவிடாமல் தடுக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து நீரிழிவு பிரச்சனையை கட்டுபடுத்த உதவுகிறது.

முக்கியமாக  வாழை இலை ஜூஸில் பாலிப்பினைல்கள், பிளவனாய்டுகள் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோய் செல்களை முற்றிலுமாக அளிப்பதற்கு பெரிதும் உதவி புரிகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை உடைய வாழை இலையை ஜூஸாக எடுத்துக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோயை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

விரைவில் உலகம் முழுவதும் கூகுள் பே மூலம் பணம் செலுத்தும் வசதி!… ஒப்பந்தம் போட்ட கூகுள்!

Sat Jan 20 , 2024
கூகுள் பே மூலம் யுபிஐ முறையில் உலக நாடுகளில் இந்தியர்கள் பணம் செலுத்தும் அம்சம் விரைவில் அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கூகுள் இந்தியா டிஜிட்டல் சேவை மற்றும் என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் லிமிடெட் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் யுபிஐ பேமென்ட் மேற்கொள்ளும் வசதி, உலக நாடுகளில் யுபிஐ பேமென்ட் முறையை கட்டமைப்பது, உலக நாடுகளுக்கு இடையே பணம் அனுப்பும் நடைமுறையை எளிதாக்குவது என […]

You May Like