fbpx

பெட்ஷீட்டுக்காக அக்காவிடம் சண்டை.. கோபத்தில் தங்கை எடுத்த விபரீத முடிவு..!! இதற்கெல்லாமா தற்கொலை?

பெங்களூரு நகரின் சாமராஜ் பேட்டை பகுதியில் அக்காவுடன் பெட்ஷீட்டுக்காக சண்டைபோட்ட தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சாமராஜ் பேட்டை பகுதியில் தனது பெற்றோர் மற்றும் அக்காவுடன் வசித்து வருபவர் ஷ்ரவ்யா. இவருக்கு வயது 19. ஷ்ரவ்யா அங்குள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி ஷ்ரவ்யா தூங்கும் போது பெட்ஷீட் கேட்டு தனது அக்காவுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஷ்ரவ்யா மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. 

அதன் பிறகு மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் இளம்பெண் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற ஒரு சம்பவத்தில், பெங்களூரில் 20 வயது மாணவர், அவருக்கு புதிய பைக் வாங்கி தர மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். இறந்தவர் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இன்றைய இளைஞர்கள் சின்ன விஷயங்களுக்கு கூட தற்கொலை செய்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது சமூதாயத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; கள்ளக்காதலனுக்காக கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி..!! உடலை தோண்டி எடுத்த போலீஸ்..!! மகளால் வெளிவந்த மாரடைப்பு நாடகம்..!!

English Summary

Bengaluru girl, 19, dies by suicide after argument over bedsheet with elder sisterc

Next Post

நடைமுறைக்கு வந்த ஸ்பாட் பைன் மெஷின்..!! இதுவரை ரூ.5 லட்சம் வசூல்..!! இனி யாரும் இப்படி பண்ணாதீங்க..!!

Mon Oct 21 , 2024
Officials have said that a new system of imposing fines through spot pine machines has come into effect.

You May Like