உணவுப் பொருளாதாரத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது நுகர்வோருக்கு ‘பாரத் ரைஸ்’ சில்லறை விற்பனையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 5 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ‘பாரத் ரைஸ்’ பிராண்டின் கீழ் சில்லறை விற்பனைக்காக தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய கூட்டுறவு நிதி மற்றும் மத்திய பண்டக சாலை ஆகிய 3 ஏஜென்சிகள் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் பாரத் அரிசியின் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.29 ஆக இருக்கும். 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் வரும் 9-ம் தேதி முதல் அரிசி விற்பனை செய்யப்படும். பாரத் அரிசி முதலில் மூன்று மத்திய கூட்டுறவு நிறுவனங்களின் மொபைல் வேன்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருந்து வாங்குவதற்கு கிடைக்கும், மேலும் இது மிக விரைவில் இ-வணிகத் தளங்கள் உள்ளிட்ட பிற சில்லறைக் கடைகளிலும் கிடைக்கும்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பல இடங்களில் கடைகள் வைத்திருக்கும் பெரிய விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள், ஆலை உரிமையாளர்கள் ஆகியோருக்கு மறு உத்தரவு வரும் வரை அரிசி மற்றும் நெல் கையிருப்பு நிலவரம் குறித்து அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.