fbpx

நேற்று விருது இன்று கைது…..! கருணாநிதி தொடர்பாக அவதூறு பரப்பியதாக பாஜகவின் பெண் ஆதரவாளரை கைது செய்த காவல்துறையினர்…..!

கோவையைச் சேர்ந்த உமா கார்க்கி என்ற இளம் பெண் சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் பெரியார் கருணாநிதி தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டோர் தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் வலைதளத்தில் அவதூறாக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி உமா கார்க்கியின் மீது புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில், கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் உமா கார்கியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கோவை காலப்பட்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறந்த செயல்பாட்டாளர் என உமா கார்கிக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக கேவியட் மனுவை தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜியின் மனைவி…..! அடுத்தது என்ன….?

Tue Jun 20 , 2023
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதில் இதய நாளங்களில் மூன்று அடைப்புகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நாளை காலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட […]
சிக்கிய செந்தில் பாலாஜி..! சீறும் உச்சநீதிமன்றம்..! அமைச்சர் பதவிக்கு வேட்டு வைக்கும் உத்தரவு..!

You May Like