கோவையைச் சேர்ந்த உமா கார்க்கி என்ற இளம் பெண் சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் பெரியார் கருணாநிதி தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டோர் தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் வலைதளத்தில் அவதூறாக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி உமா கார்க்கியின் மீது புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் உமா கார்கியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கோவை காலப்பட்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறந்த செயல்பாட்டாளர் என உமா கார்கிக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.