fbpx

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆசிர்வதியுங்கள்…! சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சூளுரை…!

உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தன்னை ஆசிர்வதிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

75 வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி; நமது சுதந்திரப் போராட்டத்தின் போது நமது விடுதலைப் போராளிகள் கொடூரத்தையும் கொடுமையையும் சந்திக்காத ஒரு வருடம் இல்லை. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் போது, இந்தியாவுக்கான அவர்களின் தொலைநோக்கு மற்றும் கனவை நாம் நினைவுகூர வேண்டிய நாள் இன்று. பிர்சா முண்டா, டிரோத் சிங் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு போன்ற ஆதிவாசி சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் சுதந்திரப் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகித்தனர் என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி ஊழலை முழு பலம்‌ கொண்டு நாம்‌ எதிர்க்க வேண்டும்‌. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள்‌ என்னைஆசிர்வதிக்க வேண்டும்‌. ஊழல்‌ வழக்குகளில்‌ சிறை சென்றவர்கள்‌, வெளியில்‌ வந்து தலைமை பொறுப்புகளை ஏற்கின்றனர்‌. குடும்பநலன்‌, குடும்ப அரசியல்தான்‌ ஊழலுக்கு வழி வகுக்கிறது. குடும்ப நலன்‌ என்ற மோசமான விஷயத்தால்‌ பல திறமையாளர்கள்‌ பாதிக்கப்படுகின்றனர் என கூறினார்.

Vignesh

Next Post

பூமியின் மேற்பரப்பில் 30 கி.மீ தூரத்திற்கு பறந்த தேசிய கொடி.. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு அசத்தல்..

Mon Aug 15 , 2022
நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்த வகையில், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு, பூமியின் மேற்பரப்பில் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய கொடியை ஏற்றியது. இந்தக் கொடியானது பூமியில் இருந்து 1,06,000 அடி உயரத்துக்கு பலூனில் பறக்கவிடப்பட்டது. இந்த நிகழ்வு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்பது “நாட்டிற்கு இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி, எல்லையற்ற உலகத்திற்கான […]

You May Like