fbpx

பிரியாணியில் எலும்புத் துண்டு..!! காவல்துறையை நாடிய வாடிக்கையாளர்…!! பாய்ந்தது வழக்கு..!! நடந்தது என்ன..?

குஸ்கா என்ற ப்ளைன் பிரியாணி ஆர்டர் செய்யும் போது அதில் தவறுதலாக சிக்கன் அல்லது மட்டன் பீஸ் இருந்தால் அசைவ பிரியர்களை கையிலேயே பிடிக்க முடியாது. ஆனால், இப்படியான சம்பவம் ஒன்று சைவ பிரியருக்கு நடந்ததோடு, அது போலீசிடம் புகார் கொடுக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் தூபே என்பவர்தான் தனக்கு கிடைத்த சைவ உணவில் எலும்புத் துண்டு இருந்ததாக கூறி உணவக உரிமையாளர் மீது புகார் கொடுத்திருக்கிறார். அதன்படி, வெஜ் பிரியாணி ஆர்டர் செய்திருந்த ஆகாஷ் தூபேவின் உணவில் எலும்புத் துண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, அந்த உணவக உரிமையாளர் மற்றும் நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் ஆகாஷ் தூபேவிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

பிரியாணியில் எலும்புத் துண்டு..!! காவல்துறையை நாடிய வாடிக்கையாளர்...!! பாய்ந்தது வழக்கு..!! நடந்தது என்ன..?

இருப்பினும் விஜய் நகர் காவல் நிலையத்தில் ஆகாஷ் தூபே புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரை ஏற்ற போலீசார், இதுகுறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள விஜயநகர் துணை காவல் ஆணையர் சம்பத் உபாத்யாய், ”உணவக மேலாளர் ஸ்வப்னில் குஜ்ராட்டி மீது சட்டப்பிரிவு 298ன் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

திருடிய பொருட்களுடன் ரயில் நிலையித்தில் தூங்கிய திருடர்கள்! தட்டித்தூக்கிய போலீஸ்!

Wed Dec 28 , 2022
சென்னை மாம்பலத்தில் வசித்து வருபவர் கணேஷ் பாபு நேற்று இரவு இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த கணேஷ்பாபு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னை, எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குடிபோதையில் 2 நபர்கள் படுத்து உறங்கிக் கொண்டு […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like