திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், ஆரணி பகுதியில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கலாச்சாராய சோதனையில் இதுவரையில் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.
ஆரணி உட்கோட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையினர் ஊசிமலை குப்பம், காப்புக்காடு அத்திமலைபட்டு, காரமடை மற்றும் கண்ணமங்கலம் நாமக்காரமலை, சந்தவாசல், படவேடு போன்ற பகுதிகளில் தனித்,தனி குழுக்களாக சென்று நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அதோடு மலைப்பகுதிகளில் இருக்கின்ற புதர்கள் நிலச்சரிவுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்று ரூம் கேமராக்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.