fbpx

“போலீஸ் அங்கிள்.. எங்க வீட்ல திருடன்.. சீக்கிரம் வாங்க..!!” சிறுவனிடம் இருந்து வந்த அழைப்பு.. நேரில் சென்ற அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

புத்தாண்டு தினத்தில் வயதான உறவினர்கள், சிறார்களை வாழ்த்தி பணம் வழங்குவது வழக்கம்.. இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தைகள் பணத்தை தவறாகப் பயன்படுத்தவோ, அதிகமாகச் செலவழிக்கவோ கூடாது என்பதற்காக பெற்றோர்கள் பணத்தை வாங்கி வைத்திருப்பார்கள். அப்படி ஒரு சந்தர்பத்தில், சீனாவில் சிறுவன் ஒருவன் போலீசுக்கு போன் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள லான்சோ நகரத்தில் இருந்து சிறுவன் ஒருவர் போலீசுக்கு கால் செய்துள்ளான். போன் காலை எடுத்த அதிகாரியிடம் அந்த சிறுவன் “போலீஸ் அங்கிள் என் வீட்டில் ஒரு திருடன் இருக்கிறான். அவன் என் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டான்” எனத் தெரிவித்தான்

இதையடுத்து போலீஸ் அந்த முகவரியை கண்டறிந்து நேரில் சென்று பார்த்தார். அப்போது சிறுவன் போலீஸை பார்த்ததும் உற்சாகமடைந்து “போலீஸ் அங்கில்! நீங்கள் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீங்களா..? இந்த திருடனை பிடித்துச் செல்லுங்கள்” எனத் தெரிவித்தான்.

சிறுவனின் தந்தை உடனடியாக காவல்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டு, “மன்னிக்கவும். என் மகனுக்கு தெரியாது. அவன் உண்மையில் காவல்துறையை அழைப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார். பணத்தைப் பாதுகாப்பது தொடர்பாக சிறுவன் தன்னுடன் சண்டையிட்டதாகவும், பின்னர் மொபைல் போனைப் பயன்படுத்தி போலீசாருக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் விளக்கினார்.

இதையடுத்து அந்த காவல் அதிகாரி சிறுவனிடம், “நீ உன் அப்பாவிடம் பணத்தை கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள். உனக்கு எப்போது தேவையோ அப்போது அவரிடம் இருந்து வாங்கி செலவு செய்து கொள். அவர் உன் பணத்தை உனக்கு தருவார் சரியா?” என கேட்டார். இதனிடையே சிறுவன் மீண்டும் இதுபோன்ற தவறை செய்யாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என காவல் அதிகாரி தந்தைக்கு அறிவுறுத்தினார்.

Read more : செகண்ட் ஹேண்ட் கார் வாங்க திட்டமா..? இந்த விஷயங்களை கவனிங்க.. இல்லைனா சிக்கல் தான்..!!

English Summary

Boy Calls Cops On Dad For ‘Stealing’ Holiday Money: “Uncle Police, Please Catch…”

Next Post

பறவைக் காய்ச்சல் பரவல் : கோழி மற்றும் முட்டைகளை சாப்பிடலாமா..? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

Sun Feb 16 , 2025
சமீபத்திய பறவைக் காய்ச்சல் பரவல் நாட்டில் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது, கோழி இறைச்சியை சாப்பிடலாமா வேண்டாமா என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் H5N1 பறவைக் காய்ச்சல் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த மாநிலங்களைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் உள்ளனர், வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோழிகள் இதுவரை கொல்லப்பட்டு முட்டைகள் அழிக்கப்பட்டுள்ளன. தொற்றுநோய் பரவல் […]

You May Like