fbpx

#Breaking : இலங்கையில் அவசரநிலை பிரகடனம்.. போராட்டம் தொடர்வதால் பிரதமர் ரணில் உத்தரவு..

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆனால் அதற்கு முன்பே இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச அதிபர் மாளிகையைவிட்டு தப்பியோடிவிட்டார்..

இந்நிலையில் தனது குடும்பத்தினர் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறும் வரை பதவி விலகப் போவதில்லை என்று கோட்டபய ராஜபக்ச கூறியிருந்த நிலையில் தற்போது விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.. தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் 3 ஊழியர்களுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது..

இதனிடையே இன்று தனது இராஜினாமாவை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் பிரதமருக்கு கோட்டபய அறிவுறுத்தி இருந்தார்.. இலங்கை நெறிமுறையின்படி, அவர் ராஜினாமாவை இலங்கையின் தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டும் மற்றும் அதன் நகலை பிரதமர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்ப வேண்டும். ஜூலை 20ஆம் தேதி அவருக்குப் பதிலாக நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும்.

ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலகாமல் கோட்டபய மாலத்தீவு தப்பி சென்றதால் இலங்கையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.. மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனே பதவி விலக் வேண்டும் என்று கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.. போராட்டக்காரர்கள் இலங்கை பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டதாக் கண்ணீர் புகைக்குண்டு வீசி ராணுவத்தினர் போராட்டத்தை கலைக்க முயன்றனர்.. இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவசர நிலையை பிரகடனம் செய்தார்.. மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்க கூடாது என்பதற்காக இந்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. கடந்த 4 மாதங்களில் 2 முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது..

Maha

Next Post

மாநில கல்விக் கொள்கை விவகாரத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு..! வெளியான முக்கிய தகவல்..!

Wed Jul 13 , 2022
மாநில கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்க கல்விக் கொள்கை குழு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், அதற்கு பதிலாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து மாநிலத்துக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை வகுப்பதற்காக கல்வியாளர்கள், வல்லுநர்கள் கொண்ட உயர்நிலைக் குழு […]

You May Like