fbpx

#Breaking..!! முன்னாள் எம்எல்ஏ துரை.கோவிந்தராஜன் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் ஆட்சியில் அரசு கொறடாவாகவும் இருந்த துரை. கோவிந்தராஜன் காலமானார். அவருக்கு வயது (85).

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடக்கூரில் 1937ஆம் ஆண்டில் பிறந்தார் துரை. கோவிந்தராஜன். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 1977ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவோணம் தொகுதியில் இருந்தும், 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருவையாறு தொகுதியிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

#Breaking..!! முன்னாள் எம்எல்ஏ துரை.கோவிந்தராஜன் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் ஆட்சியில் அரசு கொறடாவாகவும் இருந்த துரை. கோவிந்தராஜன் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், தஞ்சையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

திட்டம் போட்டுக் கொல்லப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரி.! சினிமாப் பாணியில் கொடூரம்.!

Mon Nov 7 , 2022
மைசூர் பகுதியில் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரியான குல்கர்னி என்ற 82 வயது பெற்ற நபர் சென்ற வெள்ளிக்கிழமை அன்று மாலையில் மானச கங்கோத்ரி வளாகத்தில் வழக்கம் போல் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் , எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று குல்கர்னி மீது மோதியது. ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து […]

You May Like