fbpx

Breaking news: அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த பரபரப்பு….! சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை…..!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவர் தொடர்பான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது.

இதன் காரணமாக, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு அமைச்சரை அமலாக்கத்துறை சுற்றி வளைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் தான் அமைச்சர் பொன்முடியின் இல்லம் அவர் தொடர்பான அலுவலகங்கள் உட்பட 13 இடங்களில் அமராக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது அவருடைய மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணி வீட்டிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. கௌதம் சிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருந்த நிலையில், மத்திய ரிசர்வ் படை உதவியுடன் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

Next Post

அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் 116 காலி பணியிடங்கள்…..! உடனே விண்ணப்பியுங்கள்…..!

Mon Jul 17 , 2023
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி, புள்ளியியல் நிபுணர் போன்ற பதவிகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன் மூலமாக, ஒட்டுமொத்தமாக 116 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதற்கான ஒதுக்கீடு அரசு அறிவிப்பின்படி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் வருவாய் துறை மூலமாக வழங்கப்பட்ட சரியான சான்றிதழை சமர்ப்பித்து இட ஒதுக்கீட்டை உறுதி […]

You May Like