fbpx

Breakingnews: செந்தில் பாலாஜி விவகாரம் அதிமுக எடுத்த திடீர் அதிரடி முடிவு…..!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து வரும் 21ஆம் தேதி அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியின் தலைமை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதோடு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவற்றை கண்டித்தும் அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக முழுவதும் இருக்கின்ற மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு வரும் 21ஆம் தேதி காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்திருக்கிறார்.

Next Post

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிரடி வேட்டை….! 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை…..!

Fri Jun 16 , 2023
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் எல்லை பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக ராணுவத்தினருக்கு தகவல் வந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்று காலை 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்று காஷ்மீர் ஏடிஜிபி விஜயகுமார் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அந்த பகுதிகளில் தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

You May Like