தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஏடிஜிபி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஏடிஜிபியாக இருந்த அருண் ஆவடி மாநகர காவல் ஆணையராக நியமனம். ஆவடி காவல் ஆணையராக இருந்த சந்தீப்ராய் ரத்தோருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள சந்தீப்ராய் ரத்தர் சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமனம். சென்னை பூக்கடை துணை ஆணையராக ஸ்ரேயா குப்தா நியமனம்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங்க் அதே துறைக்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். டான்ஜெட்கோவில் விஜிலென்ஸ் ஏடிஜிபியாக இருந்த வன்னிய பெருமாள் அதே பிரிவில் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக சஷாங்க் சாய் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான், நாகை எஸ்.பி.யாக ஹர்ஷ் சிங், ஈரோடு எஸ்.பி.யாக ஜவஹர், நாமக்கல் எஸ்.பி.யாக ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்.பி.யாக மணிவண்ணன், செங்கல்பட்டு எஸ்.பி.யாக சாய் பிரனீத், திருப்பூர் எஸ்.பி.யாக சாமிநாதன் ஆகியோர் நியமனம்.