தமிழகத்தில் பல பகுதிகளிலும் திடீரென்று செங்கல் விலை உயர்ந்துள்ளது. பல மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக செங்கற்கள் விலை உயர்ந்துள்ளது. ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், திட்டுவிளையில் மழையால் செங்கல் சூளைகளில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தட்டுபாடு காரணமாக 3,000 செங்கற்கள் கொண்ட ஒரு லோடின் விலை 15,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஒரு செங்கல் விலை ரூ.5.20-லிருந்து ரூ. 6.40 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழகம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது ஒப்பந்ததாரர்களுக்கு சவாலாக மாறி இருக்கிறது. தமிழகம் முழுவதும் இது கட்டுமானப் பணியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more | பெற்றோர்களே உஷார்… தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி 8 வயது சிறுமி பலி.!! – பகீர் சம்பவம்