fbpx

#ராமநாதபுரம்: 10 நாட்களில் மணவறை ஏறவேண்டிய மணமகன்.. பிணவறையில் கிடந்த சோகம் ..!

ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள புதூரில் அலெக்சாண்டர் எனபவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் அலெக்சாண்டர் திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் தனது இருசக்கர வாகனத்தில் அழைப்பிதழ்களை கொடுக்க புறப்பட்டுள்ளார்.

உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் அண்டகுடி அருகே அவருக்கு எதிர் திசையில் வந்த கனரக வாகனம் ஒன்று அலெக்சாண்டர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அலெக்சாண்டரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அலெக்சாண்டர் உயிரிழந்து விட்டார். 

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10 நாள்களில் திருமணம் நடைபெற இருந்த புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறப்போகும் புதின்… அடுத்த அதிபர் யார்…?

Sat Jan 14 , 2023
ரஷ்ய அதிபர் புதின் ஓய்வு பெற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். 11 மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு முடிவடையவில்லை… ஆரம்பத்தில் ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது. ஆனாலும் உக்ரைன் சரணடையாமல் […]

You May Like