மனிதனுக்கு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே முக்கியமானது தான். அதில் சிறுநீரகமும் ஒன்று. அதோடு, சிறுநீரகம் மனிதனுக்கு மிக முக்கிய உறுப்பு என்றும் கூறப்படுகிறது. ரத்தத்தை வடிகட்டி, செரிமான அமைப்பிலிருந்து வெளியிடப்படும் கழிவுகள் அதிக அளவிலான திரவங்களை வெளியேற்றுவதற்கான உறுப்பாக சிறுநீரகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதயம் குறித்த நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நோய்களைப் போல சிறுநீரக தொற்றும் மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. சிறுநீரின் நிறம் மாறி காணப்பட்டால், அல்லது சிறுநீர் அசாதாரணமாக, காணப்பட்டால், அவருக்கு சிறுநீரகப் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது.
மேலும், கழிவுகள், ரத்தத்தோடு சிறுநீர் வந்தாலும் துர்நாற்றத்தோடு, வந்தாலும், சிறுநீரக நோய் தொடங்கப் போகிறது என்று அர்த்தம் என கூறப்படுகிறது.
அத்துடன், அவ்வப்போது, வாந்தி, குமட்டல் உள்ளிட்டவை ஏற்பட்டாலும், சிறுநீரகத்தை சோதித்துப் பார்ப்பது மிகவும் அவசியம். சிறுநீரகம் அமைந்துள்ள பின்பகுதியில் வலி அதிகமாக காணப்பட்டாலும், சிறுநீரக செயல் இழப்புக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.