டெல்லியில் இளம் பெண் ஒருவர் கார் மோதி சுமார் 4 கி.மீ தூரம் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கையை கேட்டுள்ளது.
புத்தாண்டு இரவில் 20 வயதான இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது சாலையில் சென்ற ஒரு கார் பெண்ணின் வாகனம் மீது மோதியது. காரில் வந்த 5 பேரும், காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியதில், பெண் விபத்தில் சிக்கினார். இதில் பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது. கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண்ணின் ஆடை கிழிந்தால், அவர் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
காரில் சென்ற ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இது தற்செயலாக நேர்ந்த விபத்து அல்ல, பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகரில் பல்வேறு அமைப்பினர் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையை பெற்று தர வேண்டும் என கூறி போராட்டம் நடத்தி வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.