fbpx

அய்யோ..! டெல்லியில் 20 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்…! அறிக்கையை கேட்ட மத்திய உள்துறை…!

டெல்லியில் இளம் பெண் ஒருவர் கார் மோதி சுமார் 4 கி.மீ தூரம் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கையை கேட்டுள்ளது.

புத்தாண்டு இரவில் 20 வயதான இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது சாலையில் சென்ற ஒரு கார் பெண்ணின் வாகனம் மீது மோதியது. காரில் வந்த 5 பேரும், காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியதில், பெண் விபத்தில் சிக்கினார். இதில் பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது. கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண்ணின் ஆடை கிழிந்தால், அவர் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

காரில் சென்ற ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இது தற்செயலாக நேர்ந்த விபத்து அல்ல, பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகரில் பல்வேறு அமைப்பினர் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையை பெற்று தர வேண்டும் என கூறி போராட்டம் நடத்தி வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

நற்செய்தி...!மாதம் ரூ.1,000 வேண்டுமா...? பிப் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம்...! உடனே அப்ளை பண்ணுங்க...

Tue Jan 3 , 2023
வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தமிழக அரசு வழங்கும் மாதம் தோறும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு […]
செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000..? சிறப்பு விருந்தினர் இவர்தான்..! வெளியான முக்கிய தகவல்

You May Like