fbpx

முறைகேடு வழக்கு…! சிபிஐ காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு…! டெல்லி அரசியலில் தொடரும் பரபரப்பு…!

மணீஷ் சிசோடியா சிபிஐ காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது, ஆனால் விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மணிஷ் சிசோடியாவை மேலும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில், 2 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரிய மனு மீது 10ம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தென்தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்...!

Sun Mar 5 , 2023
தென்தமிழக மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 7 ,8 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் […]
இன்று முதல் 3 நாட்களுக்கு..!! எங்கெங்கு மழை பெய்யும்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

You May Like