நிலவில் தரையிறங்குவதற்கு முன்னரே நாமக்கல் மண்ணில் சந்திரயான்-2 தரையிறங்கியது எப்படி? என்ற கேள்விக்கு தற்போது விடை தெரிந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை அதன் தென் துருவத்தில் இறங்கி, ஆய்வு செய்வதற்காக, இந்தியா தரப்பில், சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது
அதாவது, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இந்தியாவின் சார்பாக நிலவின் பெண் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுழன்று கொண்டிருக்கும் அந்த விண்கலம் இன்று மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் என்று இஸ்ரோதெரிவித்திருக்கிறது. இந்த நிகழ்வை இந்தியா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகமே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் சந்திரனில் தரையிறங்குவதற்கு முன்னரே நாமக்கல்லில் இருந்து மண் எடுத்து வந்து, இஸ்ரோவில் சந்திரயான்-2 விண்கலத்தில் அனைத்து செயல்பாடுகளும் சரியாக இருக்கிறதா? என்று சோதித்து பார்த்த செய்தி தற்போது தெரியவந்துள்ளது.
சந்திரயான்-2 விண்கலத்தை சோதித்து பார்ப்பதற்காக, நிலவில் உள்ளதை போன்ற மண் நமக்கு தேவைப்பட்டது. அந்த மண் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிடமிருந்து, 15,000 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ மண் வாங்கி வரப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. இதன் பிறகு, அந்த வகையான மண் இந்தியாவில் இருக்கிறதா? என்பதை பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய தொடங்கினர். அந்த வகையில், தமிழகத்தில், நாமக்கல் மாவட்டம் ப. வேலூர் தாலுகா குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி போன்ற கிராமங்களில் இருக்கிறது என்பது தெரிய வந்தது.
ஆகவே 50 டன் அளவிற்கு அந்த மண் மற்றும் பாறைகள் பெங்களூருவில் இருக்கின்ற இஸ்ரோ மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு அந்த மண் மாதிரிகளை வைத்து, சிறப்பு ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டு, சந்திரயான்-3 ஆர்பிட்டர் நிலவின் பரப்பில் பத்திரமாக இறங்குவதையும் லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்து பார்த்தனர். அதோடு தங்கள் ஊர் மண்ணை வைத்து சந்திரயானுக்கு சோதனை நடத்தியது நாமக்கல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.