fbpx

தரையிறங்குவதற்கு முன்னரே நாமக்கல் மண்ணில் தரையிறங்கிய சந்திரயான்-3….! இது எப்படி சாத்தியம்….?

நிலவில் தரையிறங்குவதற்கு முன்னரே நாமக்கல் மண்ணில் சந்திரயான்-2 தரையிறங்கியது எப்படி? என்ற கேள்விக்கு தற்போது விடை தெரிந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை அதன் தென் துருவத்தில் இறங்கி, ஆய்வு செய்வதற்காக, இந்தியா தரப்பில், சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது

அதாவது, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இந்தியாவின் சார்பாக நிலவின் பெண் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுழன்று கொண்டிருக்கும் அந்த விண்கலம் இன்று மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் என்று இஸ்ரோதெரிவித்திருக்கிறது. இந்த நிகழ்வை இந்தியா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகமே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் சந்திரனில் தரையிறங்குவதற்கு முன்னரே நாமக்கல்லில் இருந்து மண் எடுத்து வந்து, இஸ்ரோவில் சந்திரயான்-2 விண்கலத்தில் அனைத்து செயல்பாடுகளும் சரியாக இருக்கிறதா? என்று சோதித்து பார்த்த செய்தி தற்போது தெரியவந்துள்ளது.

சந்திரயான்-2 விண்கலத்தை சோதித்து பார்ப்பதற்காக, நிலவில் உள்ளதை போன்ற மண் நமக்கு தேவைப்பட்டது. அந்த மண் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிடமிருந்து, 15,000 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ மண் வாங்கி வரப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. இதன் பிறகு, அந்த வகையான மண் இந்தியாவில் இருக்கிறதா? என்பதை பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய தொடங்கினர். அந்த வகையில், தமிழகத்தில், நாமக்கல் மாவட்டம் ப. வேலூர் தாலுகா குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி போன்ற கிராமங்களில் இருக்கிறது என்பது தெரிய வந்தது.

ஆகவே 50 டன் அளவிற்கு அந்த மண் மற்றும் பாறைகள் பெங்களூருவில் இருக்கின்ற இஸ்ரோ மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு அந்த மண் மாதிரிகளை வைத்து, சிறப்பு ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டு, சந்திரயான்-3 ஆர்பிட்டர் நிலவின் பரப்பில் பத்திரமாக இறங்குவதையும் லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்து பார்த்தனர். அதோடு தங்கள் ஊர் மண்ணை வைத்து சந்திரயானுக்கு சோதனை நடத்தியது நாமக்கல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

புற்றுநோய்க்கு புகைபிடித்தல் மட்டும் காரணம் அல்ல!… இந்த காரணங்களாலும் ஏற்படுமாம்!… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Wed Aug 23 , 2023
நுரையீரல் புற்றுநோய்க்கான அனைத்து காரணங்களையும் அதன் அபாயத்தை எவ்வாறு குறைப்பது என்பது குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நுரையீரல் புற்றுநோய் உள்ளது. பீடி, சிகரெட்-டை தொடர்ந்து குடித்துவந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் என்று அனைவரும் அறிவார்கள். நுரையீரல் புற்றுநோயின் மிகவும் மோசமான ஆபத்து காரணியாக புகைபிடித்தல் இருக்கிறது. இருப்பினும், புகையிலை பயன்பாட்டிற்கு அப்பால், நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் […]

You May Like