fbpx

Chhattisgarh: 13 வருடமாக நடந்த கொடூரம்.! உறவுக்கார பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நடிகர் கைது.!

சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான மனோஜ் ராஜ்புத், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ராஜ்புத். இவர் நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 13 வருடங்களாக பாலியல் பலாதாரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் திருமணம் செய்ய மறுப்பதை தொடர்ந்து, அந்தப் பெண் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி பழைய பிலாய் ரயில்வே ஸ்டேஷன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து நடிகர் மனோஜ் ராஜ்புத் கைது செய்யப்பட்டார். தற்போது 29 வயதான அந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்படும் போது சிறுமியாக இருந்ததால், நடிகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை அதிகாரி ராஜ்குமார் போர்ஜா” நடிகர் மனோஜ் ராஜ்புத் தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, கடந்த 13 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். மேலும் இயற்கைக்கு மாறான முறையிலும் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக தெரிவித்தார். எனினும் 2011 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் நடைமுறையில் இல்லாததால் அந்த சட்டப் பிரிவில் பல பதிவு செய்த வழக்கை மாற்றும்படி நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

English Summary: Famous Chhattisgarh actor arrested for raping her relative girl for 13 years by making a false promise of marry her.

Read more: BREAKING | சாந்தனின் உடல்நிலையில் பின்னடைவு..!! மருத்துவர்கள் தொடர் சிகிச்சை..!!

Next Post

’யாருமே எங்களை சேர்க்கல’..!! Lok Sabha தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டி..!! அதிரடியாக அறிவித்த கட்சி..!!

Mon Feb 26 , 2024
தமிழ்நாட்டின் பெரிய அரசியல் கட்சிகளால் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவதால் இம்முறை தமிழ்நாடு, புதுச்சேரி என 40 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக விடுதலைக் களம் கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறிய கட்சிகளுக்கும் மவுசு கூடியுள்ளது. அந்தக் கட்சிகளின் ஆதரவை பெறும் முனைப்பில் பெரிய கட்சிகள் தீவிரமாக உள்ளன. ஆனால், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அதனை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று சிறிய கட்சிகள் […]

You May Like