fbpx

ஃப்ரிட்ஜ் வெடித்து பரிதாபமாக உயிரிழந்த 3 பேர்.. 2 பேர் உயிருக்கு போராட்டம்.!

செங்கல்பட்டு அருகே ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் பிரிட்ஜ் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கட் ரமணன். இவர் கடந்த வருடம் உயிர் இழந்து விட்டதால் திதி குடுப்பதற்காக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் துபாயிலிருந்து கிரிஜா, ராதா, ராஜ்குமார், ஆராதயா மற்றும் பாரதி ஆகிய 5 வரும் வந்திருந்தனர்.

நேற்றைய தினத்தில் இவர்கள அப்பகுதிக்கு வந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக பூட்டி இருந்த அந்த வீடு சரியான முறையில் பராமரிக்க படாததால், பிரிட்ஜ் ஆன் செய்த போது சத்தம் வந்ததை தொடர்ந்து பிரிட்ஜ் திடீரென வெடித்துள்ளது.

இதில், சம்பவ இடத்திலேயே , பிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலத்த காயம் அடைந்த 6 வயது குழந்தை உள்பட 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

#Home Tour..!! நடிகர் பிரபுதேவாவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா..? வீடியோவுடன் உங்களுக்காக இதோ..!!

Fri Nov 4 , 2022
நடிகர் பிரபுதேவாவின் பிரம்மாண்ட வீட்டின் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடன இயக்குனர் சுந்தரத்தின் மகன் ஆவார். வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார். இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனம் ஆடியிருக்கிறார். குறிப்பாக, மின்சார கனவு படத்தில் வரும் ’வெண்ணிலவே வெண்ணிலவே’ […]
#Home Tour..!! நடிகர் பிரபுதேவாவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா..? வீடியோவுடன் உங்களுக்காக இதோ..!!

You May Like