சென்னை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலக வளாகத்தில் விசாரணை கைதி 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராயப்பன் ஷாஜி ஆண்டனி எனும்
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இவர், 48 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நேற்று சென்னையை அடுத்த சோழவரம் அருகே மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், மனம் குழம்பிய நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னையை அடுத்து அமைந்துள்ள அயப்பாக்கம் என்ற பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தின் 3
மூன்றாவது மாடியின் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.