fbpx

பயங்கர மழை… 14-ம் தேதியே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி…! வானிலை மையம் எச்சரிக்கை

வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது தீவிரமடைந்து வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தீவிரமடைந்து பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 14-ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக வருகிற 14-ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த ‌ தாழ்வு இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் ‌15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. முன்னதாக அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் மகாராஷ்டிர பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

English Summary

Chennai Meteorological Center has said that a new low pressure area is likely to form in the Bay of Bengal

Vignesh

Next Post

2024-25-ல் பத்திரப் பதிவுத்துறையின் வருவாய் அதிகரிப்பு..‌! தமிழக அரசு தகவல்

Sun Oct 13 , 2024
The Tamil Nadu government has announced that it has earned an additional revenue of Rs.9,085 crore in the current financial year.

You May Like