fbpx

தமிழகம் முழுவதும் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை தான்..‌‌.! மழைக்கு வாய்ப்பு இல்லை…!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. தமிழகம்‌, புதுச்சேரியில்‌ வெப்ப அலை அறிவிப்பதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்‌ அளவை எட்டவில்லை. கடலுக்கு செல்லும்‌ மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை..!! உடனே விண்ணப்பியுங்கள்..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

Sun Apr 16 , 2023
தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்தவகையில், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இன்னும் வேலை கிடைக்காத பட்சத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். குடும்ப ஆண்டு வருமானம் 22 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ள மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த 40 […]

You May Like