fbpx

#Rain: இந்த 12 மாவட்டத்தில் உள்ள மக்களே கவனமாக இருங்க.‌..! கொட்ட போகும் கனமழை…!

கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21,22 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பாஜகவுடன் முறிந்த கூட்டணி..! அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என ஜெயக்குமார் தகவல்..!

Tue Sep 19 , 2023
பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக கடந்த 11ஆம் தேதி, மதுரை தமிழ் மாநாட்டில் முத்துராமலிங்க தேவரிடம் மன்னிப்பு கேட்டு ஓடி வந்தவர் அண்ணா என்று அண்ணாமலை பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாற்று சி.வி.சண்முகம் அண்ணாமலையின் பேரறிஞர் அண்ணா குறித்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதனால் அதிமுக- பாஜக […]

You May Like