சென்னையில் சொகுசு விடுதி ஒன்றில் அழகு சாதன நிலையம் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம் செய்து வந்த கும்பலை காவல்துறை கைது செய்து இருக்கிறது. இவர்களிடமிருந்து ஐந்து வட மாநில பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஹைடெக் கும்பலை பிடிக்க காவல்துறையினர் திட்டம் தீட்டினர். ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து அதன் பிறகு கஸ்டமர்களை பியூட்டி பார்லர் வர வைத்து அங்கு வேலை செய்யும் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.
இதனைத் தொடர்ந்து கஸ்டமர் போல காவல் அதிகாரி ஒருவர் பியூட்டி பார்லர் சென்று இருக்கிறார். அப்போது விபச்சாரம் தொடர்பாக அவர் விசாரித்ததில் ஆன்லைனில் பணம் கட்டிய ரசீதை கேட்டிருக்கின்றனர். இதனை வைத்து அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தது காவல்துறை. மேலும் அவர்களிடமிருந்த ஐந்து வட மாநில பெண்களையும் மீட்டிருக்கிறது. மேலும் இதுபோல ஹைடெக் முறையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலமாக பாலியல் புரோக்கர்கள் பெண்களுக்கு வலை விரித்து இருப்பதாகவும் இது தொடர்பாக பல புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.