சென்னையில் உள்ளகரம் என்ற இடத்தில் வசிப்பவர் இளங்கோவன் (20). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ.தமிழ் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே உள்ளகரம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் நட்புடன் பழகினார். இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளனர்.
இந்நிலையில்இளங்கோவன் மற்றும் மாணவியின் காதல் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்து கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இதனையடுத்து, இளங்கோவன் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி கொண்டார்.இதன் பிறகு கடும் மனஉளைச்சல்லில் மாணவி இருந்திருக்கிறார்.
இதனையடுத்து, ஜனவரி 26ம் தேதியன்று இளங்கோவனுக்கு பிறந்த நாள் என்பதால் மீண்டும் மாணவியும், அவரும் வெளியே சென்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இதன்பிறகு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றாக இனி இருக்க விட மாட்டார்கள் ஒன்றாக உயிரை மாய்த்து கொள்ளலாம் என எண்ணி இருவரும் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து குதித்து உள்ளார்கள்.
இதில் மாணவி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இளங்கோவன் உயிர் துடித்து கொண்டிருந்ததை பார்த்வர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தார்கள் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.