fbpx

நட்பு, காதலாகி, காதலே பெண்ணுக்கு எமனான சோகம்.. சென்னையில் பகீர்.!

சென்னையில்  உள்ளகரம் என்ற இடத்தில் வசிப்பவர் இளங்கோவன் (20). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ.தமிழ் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே உள்ளகரம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் நட்புடன் பழகினார். இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளனர்.

இந்நிலையில்இளங்கோவன் மற்றும் மாணவியின் காதல் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்து கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இதனையடுத்து, இளங்கோவன் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி கொண்டார்.இதன் பிறகு கடும் மனஉளைச்சல்லில் மாணவி இருந்திருக்கிறார்.

இதனையடுத்து, ஜனவரி 26ம் தேதியன்று இளங்கோவனுக்கு பிறந்த நாள் என்பதால் மீண்டும் மாணவியும், அவரும் வெளியே சென்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இதன்பிறகு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றாக இனி இருக்க விட மாட்டார்கள் ஒன்றாக உயிரை மாய்த்து கொள்ளலாம் என எண்ணி இருவரும் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து குதித்து உள்ளார்கள்.

இதில் மாணவி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இளங்கோவன் உயிர் துடித்து கொண்டிருந்ததை பார்த்வர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தார்கள் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Baskar

Next Post

அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் - கூலிப்படை வைத்து தீர்த்து கட்டிய பரிதாபம்.!

Sat Jan 28 , 2023
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த துங்கபத்ரா நகரைச் சார்ந்தவர் செந்தில்குமார்(41) இவர் அதிமுக ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் சம்பந்தமாக இவருக்கும் இன்னொருவருக்கும் முன் விரோதம் இருக்கவே காஞ்சிபுரத்தில் இருந்து  செங்கல்பட்டுவிற்கு  குடி பெயர்ந்தார். செங்கல்பட்டுவில் தனது கன்ஸ்ட்ரக்ஷன் பணியை தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த மாதம் தனது இரண்டு குழந்தைகளை பள்ளியில் விட்டு பணிக்குத் திரும்பியவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சராமாறியாக வெட்டியது. படுகாயம் அடைந்தவர் செங்கல்பட்டு அரச மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு பின் சிகிச்சை […]

You May Like