தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியின் ஆண் குழந்தைக்கு முதல்வர் ஸ்டாலின் ‘திராவிட அரசன்’ என்று பெயர் சூட்டினார். இது மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற இந்திய வரலாற்றுச் சங்கத்தின் 81வது மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தனது குழந்தையுடன் செயல் தலைவர் ஸ்டாலினிடம் ஆசி பெற்றார்.
அதற்கு அவர், ‘நாங்கள் இன்னும் பெயர் வைக்கவில்லை, என் மகனுக்கு நீங்கள் பெயர் வைக்க வேண்டும்’ என்றார். உடனே முதல்வர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் குழந்தையைத் தூக்கி ‘திராவிட அரசன் ’ என்று பெயரிட்டார்.