சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த அக்ஷிதா என்ற சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் .
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், எருக்கூர் கிராமம், வடக்கு தெருவில் வசித்து வரும் திருராமன் எண்பணின் மகள் அக் ஷிதா என்ற ஐந்து வயது சிறுமி விட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த பெரிய வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வடிங்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.