fbpx

சீனா ஓபன் டென்னிஸ்!. உலகின் NO.1 வீரர் ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

Jannik Sinner: ஊக்கமருந்து சர்ச்சைக்கு மத்தியில் சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஓபனை வென்ற ஜானிக் சின்னர், மார்ச் மாதத்தில் இரண்டு முறை அனபோலிக் ஸ்டீராய்டுக்கு நேர்மறை சோதனை செய்தார், ஆனால் ஆகஸ்ட் 20 அன்று சர்வதேச டென்னிஸ் நேர்மை ஏஜென்சி (ஐடிஐஏ) அவர் குற்றம் செய்யவில்லை என்று தீர்ப்பளித்தது. அதாவது, விரலில் ஏற்பட்ட வெட்டு காயத்திற்க்கு சிகிச்சையளிப்பதற்கு ஸ்டீராய்டு அடங்கிய ஸ்ப்ரேயைப் பயன்படுத்தியபோது, தடைசெய்யப்பட்ட பொருள் அவரது உடலில் நுழைந்தது என்ற சின்னரின் விளக்கத்தை ITIA ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்று வரும் சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி), ஜிரி லெஹெக்கா உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னர் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுளார்.

Readmore: 56 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விமான விபத்து!. 4 இந்திய வீரர்களின் உடல்கள் மீட்பு!.

English Summary

World No. 1 Jannik Sinner Joins Carlos Alcaraz & Daniil Medvedev In China Open Semis

Kokila

Next Post

‘TN Alert’ செயலி அறிமுகம்!. வானிலை முன்னெச்சரிக்கை குறித்து தமிழிலேயே தெரிந்துகொள்ள ஏற்பாடு!

Tue Oct 1 , 2024
Introduction of 'TN Alert' app! Arrangement to know about weather forecast in Tamil!

You May Like