10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை இன்று மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப்பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப்பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அறிவியியல் பாட செய்முறைத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்களால் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் நடத்தப்படும் 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வினை எழுத வேண்டும்.
இந்தத் தேர்வர்கள் முன்கூட்டியே செய்முறைத்தேர்வு நடத்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவர்களை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்.10-ம் வகுப்பு துணைத்தேர்விற்கான தேர்வுகால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.