fbpx

அரசு அதிரடி…! 12-ம்‌ வகுப்பு தேர்வு முடிவுகள்‌…! 4 மணிக்குள் தோல்வி அடைந்த மாணவர்களின் விவரம் அனுப்ப‌ உத்தரவு…!

12-ம்‌ வகுப்பு தேர்வு முடிவுகள்‌ வந்த அன்று மாலை 4 மணிக்குள்‌ தோல்வி அடைந்த மாணவர்களை உடனடியாக மறு தேர்விற்கு தயார்‌ செய்ய வேண்டும்‌.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்துடன்‌ இணைந்து கம்ப்யூட்டர்‌ மற்றும்‌ ஆங்கிலப்‌ பயிற்சிகளுக்கு 10, 11 மற்றும்‌ 12-ம்‌ வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து தவறாமல்‌ பங்கேற்க செய்ய வேண்டும்‌. நுழைவுத்‌ தேர்வுவிவரங்களை கூறுவதும்‌, முதன்மைக்‌கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்துச்‌ செல்வது மற்றும்‌ திறன்‌வளர்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்‌.

மாணவர்களின்‌ வாட்ஸ்‌ அப்‌ குழுவினை உருவாக்கி, மே 6-ம்‌ தேதி முதல்‌ தினசரி வழங்கப்பட உள்ள பயிற்சிகள்‌, கல்லூரி கனவு குறித்த தகவல்கள்‌ மற்றும்‌ கல்லூரி சேர்க்கை விவரங்களை அனுப்ப வேண்டும்‌. மாணவர்களின்‌ விண்ணப்ப படிவங்களை நிரப்பி, அவர்கள்‌ உயர்‌ கல்வியில்‌ சேர்வதை உறுதி செய்ய வேண்டும்‌.

மேலும் 12-ம்‌ வகுப்பு தேர்வு முடிவுகள்‌ வந்த அன்று மாலை 4 மணிக்குள்‌ தோல்வி அடைந்த மாணவர்களை அழைத்து பேசி, ஆலோசனை கூறி அவர்களை உடனடியாக மறு தேர்விற்கு தயார்‌ செய்ய வேண்டும்‌. ஒவ்வொரு வட்டாரத்திலும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று 20 மாவட்டத்தில் கனமழை...! 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்...! வானிலை எச்சரிக்கை...!

Mon May 1 , 2023
தமிழகம் முழுவதும் இன்று 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னல்‌ மற்றும்‌ மணிக்கு 30 கிலோமீட்டர்‌ முதல்‌ 40 கிலோமீட்டர்‌ வேகத்தில் பலத்த காற்றுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. இராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌, […]

You May Like