தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்படும்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி; தமிழகத்தில் தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பகளுக்கான தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை மாற்றி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதே போல அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஒரே நாளில்தேர்வும், ஒரே நாளில் தேர்வு முடிவுகளும் வரும் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து முதுகலை படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பமும் ஒரே நேரத்தில் பெறப்பட்டு, மாணவர்கள் விரும்பும் கல்லூரியில் சேர்க்கை முறை அடுத்தாண்டு முதல் அமுல்படுத்தப்படும். இதனால் உயர்கல்வித்துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.