fbpx

ஒன்று கூடிய நண்பர்கள் மதுவால் ஏற்பட்ட விபரீதம்…..! இளைஞர் குத்தி கொலை கோவையில் பரபரப்பு…..!

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் ஆர்ஜி புதூரில் வேட்டைக்காரன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த பகுதி அடர்ந்த புதராகவும் பொதுமக்கள் செல்வதற்கு பயப்படக்கூடிய பகுதியாகவும் இருக்கிறது. ஆகவே தனியாக இந்த வழியை செல்வதற்கு மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு புவனேஷ் குமார் என்பவர் அவருடைய நண்பர் பாலாஜி மற்றும் சிலருடன் மது அருந்து கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (22) மற்றும் அவருடைய நண்பர்களும் அதே பகுதியில் மற்றொரு இடத்தில் மது அருந்தி கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. பாலாஜி, புவனேஷ்குமார் மற்றும் நந்தகுமார் என்று நண்பர்கள் மூவருக்கும் இடையே மது போதையில் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது கடைசியில் வாக்குவாதம் கைகளப்பாகவும் மாறி உள்ளது.

மது போதையில் இருந்த இரண்டு குழுவை சார்ந்தவர்களும் சின்னியம்பாளையம் பகுதியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போதும் நந்தகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஷ் குமாரை குத்தி இருக்கின்றார்.

ரத்த காலத்தில் சரிந்த புவனேஷ் குமாரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். இவர் ஒரு கல்லூரி மாணவர் என்று தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கிருந்து நந்தகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள் உள்ளிட்டோர் தப்பிச் சென்று விட்டனர். தகவல் அறிந்து வந்த பீளமேடு காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தினர் கோவை மாநகர காவல் துறையை சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

எவ்வளவு கெஞ்சியும் விடாத கும்பல்…..! இளம் பெண்ணை காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூறார்கள்…..!

Sun Apr 2 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா என்ற பகுதியில் தேசிய விளையாட்டு பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்வது வழக்கம் இத்தகைய நிலையில், அந்த பூங்காவில் சென்ற 30ம் தேதி இரவு இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த ஒரு நபர் இரவில் தனியாக பேசுவதை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அங்கிருந்து இருவரும் […]

You May Like