ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் சகோதரனின் மகன் விவேக், தன்னுடைய மனைவியுடன் எம்ஆர்சி நகரில் வசித்து வந்துள்ளார். இவர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றார். விவேக்- கீர்த்தனா தம்பதிக்கு சசிகலாவின் தலைமையில் தான் திருமணம் நடந்தது.
கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை பற்றி திருமணத்தை நடத்தி வைத்த சசிகலாவிடம் பலமுறை கூறியதாகவும் விவேக்கை அவர்கள் யாரும் கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த மனைவி கீர்த்தனா வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
இதனை தொடர்ந்து, விவேக் மனைவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். மேலும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை அளித்த தகவலின்படி பட்டினப்பாக்கம் போலீசார் இதில் விசாரணை நடத்தி வருகின்றனர்.