fbpx

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல்நலக்குறைவால் காலமானார்….!

சென்னை 165-வது வார்டு கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல்நலக்குறைவால் காலமானார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் 165-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Vignesh

Next Post

முதியவருடன் உல்லாசமாக இருக்கவிட்டு வீடியோ எடுத்த யூடியூப் பிரபலம்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தம்பதி..!!

Thu Nov 24 , 2022
கேரளாவில் 68 வயது முதியவருடன் உல்லாசத்தில் இருந்துவிட்டு வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய யூடியூப் தம்பதியினரை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த நிஷாத்-ராஷிதா தம்பதியினர், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் யூடியூபில் வீடியோக்கள் போட்டு வருமானம் பார்க்கலாம் என முயற்சித்துள்ளனர். ஆனால், இவர்களுடைய வீடியோக்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால், பணம் சம்பாதிக்க யோசித்து இருவரும் பக்காவாக பிளான் போட்டு முகநூல் […]
முதியவருடன் உல்லாசமாக இருக்கவிட்டு வீடியோ எடுத்த யூடியூப் பிரபலம்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தம்பதி..!!

You May Like