fbpx

Flash: கோரமண்டல்‌ ரயில் விபத்து… 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…! 900 பேர் சிகிச்சை…!

ஒடிசா ரயில்கள் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொல்கத்தாவில்‌ இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ விரைவு ரயில்‌, ஒடிசா மாநிலம்‌ பாஹனாகநகர்‌ அருகே விபத்துக்குள்ளானதில்‌ 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில்‌ 900-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ படுகாயம்‌ அடைந்த நிலையில்‌ மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்‌.

மேற்கு வங்கத்தில்‌ இருந்து புறப்பட்ட யஷ்வந்த்பூர்‌ – ஹவுரா விரைவு ரயில்‌பாஹனாக நகர்‌ அருகே வந்த போது விபத்துக்குள்ளாகி தடம்‌ புரண்டு அருகில்‌ இருந்த மற்றொரு தண்டவாளத்தில்‌ விழுந்ததாக சொல்லப்படுகிறது. சென்னை சென்ட்ரல்‌ ரயில்‌ நிலையம்‌ நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல்‌ விரைவு ரயில்‌ ஏற்கனவே தடம்‌ புரண்டு கிடந்தய ஷ்வந்த்பூர்‌ – ஹவுரா ரயிலின்‌ பெட்டிகள்‌ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா அரசு 06782-262286 என்ற ஹெல்ப்லைன் எண் வழங்கியுள்ளது.

Vignesh

Next Post

தினமும் 45 நிமிடங்கள் இதை செய்யுங்கள்!... இதய நோய் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி!

Sat Jun 3 , 2023
வாழ்வியல் நோய்களாக இருக்கும் சர்க்கரை நோய், இதயநோய், மூட்டுவலி தொடங்கி புற்றுநோய் மாதிரியான பெரும் நோய்களுக்கும் கூட வழிவகுக்கும் முக்கிய பிரச்னையாக இருப்பது, உடல் எடை அதிகரிப்புதான். அதனாலேயே உடல் எடையை குறைப்பதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் எப்போதும் குறைவதில்லை. ஆனால் என்னதான் ஆர்வமாக இருந்தாலும் உடல் எடை சட்டென குறைந்துவிடுகிறதா, நன்மைகள் உடனேயே கிடைக்கின்றனவா என யோசித்தால், இல்லையென்பதே பதிலாக இருக்கிறது. உடல் எடை குறைப்பில் முக்கிய அங்கமாக […]

You May Like