fbpx

அதிகரிக்கும் கொரோனா.. வழக்கறிஞர்கள் காணொளி மூலம் ஆஜராகலாம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு..

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராகலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்..

கொரோனா முதன்முதலில் பரவத்தொடங்கிய போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது.. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.. ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.. அந்த வகையில் நீதிமன்றங்களிலும் காணொளி வாயிலாக விசாரணை நடைபெற்று வந்தது.. குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் முழுமையாக காணொளி வாயிலாக விசாரணை நடைபெற்று வந்தது.. பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.. எனினும் கடந்த ஆண்டு வரை உச்சநீதிமன்றத்தில் காணொளி வாயிலாகவே வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது..

கடந்த சில மாதங்களாக தான் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிட்டு வந்தனர்.. இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. இதனால் பல மாநிலங்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ கடந்துள்ளது..

இந்த சூழலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராகலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.. காணொளி வாயிலாக ஆஜராக விரும்பினால் வழக்கறிஞர்களுக்கு அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். தேவைப்படுபவர்கள் நேரில் வரலாம் அல்லது காணொளி வாயிலாக ஆஜராகலாம் என்று கூறியுள்ளார்.

Maha

Next Post

தணிந்தது கோடை வெப்பம்…..! தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை….!

Wed Apr 5 , 2023
தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தகைய நிலையில், திண்டுக்கல்லில் நேற்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் சாரல் மழை பெய்திருக்கிறது. அதன் பிறகு அது கனமழையாகவும் அரைமணி நேரம் கொட்டி தீர்த்தது, வடமதுரை, அய்யலூர், தாமரைப்பாடி, பில்லம நாயக்கன் பட்டி, ஜம்புலிம்பட்டி, கம்பிலியம் […]

You May Like