அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் உடலுறவு கொண்ட தம்பதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்..
ஓஹியோவில் உள்ள சிடார் பாயிண்ட் கேளிக்கை பூங்காவின் அதிகாரிகள், 32 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் ஜெயண்ட் வீல் சவாரியில் உடலுறவு கொண்டதாக பிடிபட்டதாக தெரிவித்தனர். இரண்டு சிறார் உட்பட நான்கு பெண்கள் அதை நேரடியாக பார்த்துள்ளனர்.
இந்த ஜோடி நிர்வாணமாக இருந்ததாகவும், ராட்சத சக்கர வண்டியில் உடலுறவில் ஈடுபட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாங்கள் பார்த்துக் கொண்டிருப்பதை தம்பதிகள் அறிந்த பிறகும், தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த தம்பதி அதனை மறுத்துள்ளனர். பின்னர், இருவரும் உடலுறவு கொண்டதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.