ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கயிருந்தது. ரசிகர்கள் மிக ஆர்வமாக இந்த இறுத்திப்போட்டிக்கு காத்திருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் சாம்பியன் ஆகும் அணிக்கு 20 கோடி ரூபாயும் இரண்டாமிடம் பெறும் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Post
தமிழகத்தில் இன்றுடன் நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்!!
Sun May 28 , 2023
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும். அக்னி நட்சத்திர நாட்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் […]