fbpx

#சற்று முன்: மாண்டஸ் புயல் கரையை கடந்தது..‌.! இருந்தாலும் கனமழை தொடரும்…!

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலைவில் மையம் கொண்டது. மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது. மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயல் ஆனது அதிகாலை 4 மணி அளவில் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடந்த போது பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மக்களே செம சான்ஸ்...! ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா...? இன்று மட்டுமே நடைபெறும்...

Sat Dec 10 , 2022
சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ இன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும்‌ கிடைக்கும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள்‌ வாரியாக மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டிசம்பர்‌ மாதம்‌ இரண்டாவது சனிக்கிழமையான இன்று ஒவ்வொரு வட்டாட்சியர்‌ […]

You May Like