மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சோனாலி சென் (39) என்பவர் தன்னுடைய தாய் மற்றும் மாமியாருடன் பெங்களூரில் வசித்து வந்தார். மேலும் இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்தார் அடிக்கடி தன்னுடைய தாயார் பீவா பவுலுடன் சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட அந்த பெண்மணி, தன்னுடைய தாயாருக்கு வாலில் பதினைந்து தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து இருக்கிறார்கள் சற்று நேரத்தில் மயக்கம் அடைந்த தாயாரின் கழுத்தை தன்னுடைய துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.
அதன் பிறகு சோனாலி சென் மாலையில் மைக்ரோ அவுட் காவல் நிலையத்திற்கு பெரிய சூட்கேசுடன் சென்றார். அதில் அடைத்து வைத்திருந்த தாயின் சடலத்தை காவல்துறையினருக்கு திறந்து காட்டினார் இதனால் அதிர்ந்து போன காவல் துறையினர் சோனாலி சென் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.