fbpx

இன்ஸ்டாகிராமில் மோதிய தீபக் சஹர் – சிவம் துபே..!

அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சென்னை அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது.

14 சீசன்களில் 2 முறை மட்டுமே சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இந்த நிலையில் சென்னை அணியின் ஆல்டைம் பிளேயின் லெவனை சிஎஸ்கே இளம் வீரர் சிவம் துபே தேர்வு செய்துள்ளார். அதேபோல் தொடக்க வீரராக மேத்யூ ஹெய்டன், மைக்கேல் ஹசி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி, ஜடேஜா, ஆல்பி மார்கல், பிராவோ, ஹர்பஜன் சிங், பாலாஜி ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கடைசி வீரராக தன்னை தானே சிவம் துபே தேர்வு செய்து கொண்டுள்ளார். இந்தப் பதிவுக்கு சிஎஸ்கே ஆல்ரவுண்டர் தீபக் சஹர், அடுத்த ஆண்டு நீங்கள் பவுலராக விளையாடினால், எனக்கு அணியில் எப்படி இடம் கிடைக்கும்? அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் ஒரேயொரு ஓவர் வீசி ஒரு போட்டியில் விளையாடலாம். அந்தப் போட்டியில் யார் வெல்கிறார்களோ, அவர்கள் அணியில் இடம்பிடிக்கலாம் என்று கமெண்ட் செய்தார். உனக்காக நான் என் இடத்தை காலியாக வைத்திருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார் சிவம் துபே. சிஎஸ்கே வீரர்களின் இந்த உரையாடல் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Maha

Next Post

என்னது..!! 2 பிக்பாஸ் வீடுகளா..? அப்படினா சீசன் 7இல் தரமான சம்பவம் இருக்கு..!! வெளியான சூப்பர் அப்டேட்..!!

Mon Aug 7 , 2023
விஜய் டிவியை டிஆர்பி-யில் தூக்கி நிறுத்த உதவியது ரியாலிட்டி ஷோக்கள் தான். அந்த வகையில் கடந்த 7 மாதங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இதனால் விஜய் டிவியின் டிஆர்பி ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஆனால், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதால், தற்போது டிஆர்பி செம்ம அடி வாங்கி உள்ளது. இந்த டிஆர்பி-யை எகிற வைக்க தான் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. […]

You May Like