நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்தபடியே பாரதிய ஜனதா கட்சி (BJP) 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி (AAP) 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி காங்கிரஸ் டெல்லி சட்டமன்ற தேர்தல் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. 2025 டெல்லி தேர்தலில் காங்கிரஸ் முழுமையான தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் கணிந்திருந்தன. அதே போல காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் உள்ளது.
பத்லியில் காங்கிரஸின் தேவேந்தர் யாதவ் முன்னிலை வகிக்கிறார். பத்லியில் ஆம் ஆத்மியின் அஜேஷ் யாதவ் மற்றும் பாஜகவின் தீபக் சவுத்ரி ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.
யாதவ் 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பத்லியில் இருந்து MLAவாக இருந்தார். 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி தேர்தலில் அஜேஷ் யாதவிடம் தோல்வியடைந்தார்.
1998 முதல் 2013 வரை டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ், 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை.
தற்போது 2025 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கணித்திருந்தன. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் பாஜக 51-60 இடங்களை வெல்லும் என்றும், ஆம் ஆத்மி கட்சி 10-19 இடங்களை வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தை கூட வெல்லாது என்றும் அது கணித்துள்ளது.
சாணக்யா ஸ்ட்ராடஜீஸ் எக்ஸிட் போல் பாஜக 39-44 இடங்களை வெல்லும் என்றும் கணித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 25-28 இடங்களை வெல்லும் என்றும் கணித்துள்ளது. காங்கிரஸுக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கணித்திருந்தது.
மேட்ரிஸ் மட்டுமே நேருக்கு நேர் போட்டியை கணித்த ஒரே எக்ஸிட் போல் ஆகும். பாஜக 35-40 இடங்களை வெல்லும் என்றும், ஆம் ஆத்மி 32-37 இடங்களை வெல்லும் என்றும் அது கணித்துள்ளது. காங்கிரஸுக்கு 0-1 இடங்களை கைப்பற்றும் அது கணித்துள்ளது. ஜேவிசி எக்ஸிட் போல் பாஜக 39-45 இடங்களையும் ஆம் ஆத்மி கட்சி 22-31 இடங்களையும் கணித்துள்ளது. இது காங்கிரஸுக்கு 0-2 இடங்களை அளித்தது.
பி-மார்க் பாஜக 39-49 இடங்களையும் ஆம் ஆத்மி 21-31 இடங்களையும் கணித்துள்ளது. இது காங்கிரசுக்கு 0-1 இடத்தைக் கொடுத்தது. பீப்பிள்ஸ் இன்சைட் பாஜகவுக்கு 40-44 இடங்களையும், ஆம் ஆத்மிக்கு 25-29 இடங்களையும் கொடுத்தது. காங்கிரஸ் 0-1 இடங்களை வெல்லும் என்று கூறியது. கருத்துக்கணிப்பு டைரி பாஜகவுக்கு 42-50 இடங்களையும், ஆம் ஆத்மிக்கு 18-25 இடங்களையும் கொடுத்தது. காங்கிரஸ் 0-2 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளது. தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒத்திருக்கின்றன.
மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க வேண்டும் எனில் 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கடந்த தேர்தலில் 70 இடங்களில் 62 இடங்களை வென்று அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி தற்போது, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது இந்த தேர்தலில் ஆம் ஆத்மி பின்னடவை சந்தித்துள்ளது.