fbpx

’நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்குவதே முதல் இலக்கு’..! முக.ஸ்டாலின் நெகிழ்ச்சி

“நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்குவதே இலக்கு” என காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதன்படி, இன்று மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

’நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்குவதே முதல் இலக்கு’..! முக.ஸ்டாலின் நெகிழ்ச்சி

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”பசித்த வயிறுக்கு உணவு, தவித்த வாய்க்கு தண்ணீராக இருக்கும் திட்டம் தான் காலை சிற்றுண்டி திட்டம். எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசி சுமையை போக்குவதே முதல் இலக்கு. காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம். வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளது. பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

Chella

Next Post

தமிழகத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல்..! 282 குழந்தைகள் பாதிப்பு..! அமைச்சர் பகீர் தகவல்..!

Thu Sep 15 , 2022
தமிழகத்தில் H1N1 வைரஸ் காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது இன்புளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது புதுவகை காய்ச்சல் பரவி வருகிறது. எனவே ஒவ்வொரு பருவமழைக்கு பின்னரும் பரவும் காய்ச்சல் பற்றிய ஆய்வை மேற்கொண்டேன். தற்போது பரவும் காய்ச்சலின் உண்மை நிலையை அறிவிக்க […]
’வந்தாச்சு மழை சீசன்’..!! காய்ச்சல் வந்தால் என்ன செய்வது..? உடனடி தீர்வு இங்கே..!!

You May Like