fbpx

வெளிநாட்டு இந்தியர்களை திரும்ப வர வேண்டம் என்று எம்.ஆர்.ராதா கூறினாரா? ராதிகா விளக்கம்…!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் நீங்கள் பாஜகவுடன் இணைந்தது பற்றி உங்களது தந்தை எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று ராதிகா சரத்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராதிகா அவர்கள் கூறியதாவது “நான் எனது தந்தையிடம் அரசியல் குறித்து பேசியது இல்லை. அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர். அவருடன் நான் மலேசியா போன்ற பல வெளிநாடுகளுக்கு சென்றுள்ளேன். அவர் அங்குள்ள மக்களிடம் ஊருக்கு திரும்ப வரவேண்டாம்” என்று கூறுவார்.

உங்கள் வாழ்க்கை தரம் இங்கு நன்றாக இருக்கிறது, இங்கேயே இருங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். இன்று இந்திய அரசு மக்களின் தரத்தை உயர்த்தியுள்ளது.அதனால் எனது தந்தை இருந்திருந்தால் கண்டிப்பாக பாராட்டி இருப்பர் “என்று கூறினார்.

Maha

Next Post

PM MODI | "ஊழல்வாதிகள் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர்"… கெஜ்ரிவால் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலடி.!!

Sun Mar 31 , 2024
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் . மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ” ஊழல்வாதிகளுக்கு என்றுமே தலை வணங்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார். மிகப்பெரிய ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் […]

You May Like