fbpx

Hotel-களில் சேவை கட்டண அறிவிப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்…! மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு…!

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது  தொடர்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் மீறல் தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! வரும் 6ஆம் தேதி முதல் ஓட்டல்களில் உணவு வகைகளின் விலை உயருகிறது..!

இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு, நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்களை உடனுக்குடன் செயல்படுத்துவதுடன் விரிவான விளம்பரத்தை ஏற்பாடு செய்யுமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.  அதில் சேவைக் கட்டணம் விதிப்பது வழிகாட்டுதல்களை மீறுவதாகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறையை உருவாக்குவதாகவும், அது நுகர்வோரின் உரிமைகளைப் பாதிக்கும் என்றும், அத்தகைய புகார்களை முதன்மையாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஏராளமான நுகர்வோர் தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் தங்கள் புகாரைப் பதிவு செய்துள்ளனர். 01.04.2021 முதல் 20.06.2022 வரை, சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 537 புகார்கள் நுகர்வோரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. உணவகங்கள் சேவைக் கட்டணத்தை கட்டாயமாக்குதல், சேவைக் கட்டணத்தைச் செலுத்துவதை எதிர்க்கும் பட்சத்தில் நுகர்வோரை சங்கடப்படுத்துதல், சேவைக் கட்டணத்தை வேறு பெயரில் சேர்ப்பது ஆகியவை முக்கிய குறைகளில் அடங்கும். மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்ட பிறகு, 85 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேவைக் கட்டண புகார்களின் முதல் 5 இடத்தில்  புது டெல்லி, பெங்களூர், மும்பை, புனே மற்றும் காசியாபாத் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழக அரசு சார்பில் படித்து வேலை இல்லாதவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Vignesh

Next Post

கவனம்.. 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இனி இது கிடையாது...! அனைத்தையும் ரத்து செய்து அரசு திடீர் உத்தரவு...!

Sun Jul 10 , 2022
10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள ஆணையில்;  பள்ளிக்கல்வித்துறையில் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு 2011-ம் ஆண்டு முதல் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு […]

You May Like